இன்றும் (04) பல பகுதிகளில் கன மழை

இன்றும் (04) பல பகுதிகளில் கன மழை

by Staff Writer 04-01-2022 | 9:46 AM
Colombo (News 1st) வட கீழ் பருவப்பெயர்ச்சி காரணமாக நாட்டின் கிழக்கு பகுதியில் பலத்த மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, மேல், வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களிலும் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனிடையே மேல், சப்ரகமுவ, மற்றும் வட மேல் மாகாணங்களிலும் கண்டி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மாலை வேளைகளில் அல்லது இரவு வேளையில் இடைக்கிடையே மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, அதிக மழை காரணமாக பராக்கிரம சமுத்திரம் உள்ளிட்ட சில நீர்த்தேக்கங்கள் வான்பாய்ந்துள்ளன.

ஏனைய செய்திகள்