English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
04 Jan, 2022 | 4:33 pm
Colombo (News 1st) வைத்திய நிபுணர்களின் இடமாற்ற சபையை இதுவரை செயற்பட்ட விதத்திலேயே செயற்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் அலரி மாளிகையில் இன்று (04) முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டதாக, பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை காணப்பட்ட செயன்முறையை சில அதிகாரிகளின் விருப்பத்திற்காக மாற்ற முயற்சிப்பதனூடாக நெருக்கடிகள் ஏற்படும் என பிரதமர் கூறியுள்ளார்.
அரசியல் நோக்கில் சென்று அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உட்படுத்தாது, தொழிற்சங்கங்களுடன் நிறுவன ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக செயற்படுமாறும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
வைத்திய நிர்வாகத்தை சிரேஷ்ட, கனிஷ்ட என இரு பிரிவுகளாக பிரித்து செயற்படுத்தாது, ஒரே அடிப்படையில் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் சார்பில், விசேட வைத்திய நிபுணர் அநுருத்த பாதெனிய முன்மொழிவொன்றை சமர்ப்பித்துள்ளார்.
17 May, 2022 | 06:32 PM
13 May, 2022 | 05:23 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS