by Staff Writer 03-01-2022 | 8:39 PM
Colombo (News 1st) தலைமன்னார் கடற்பிராந்தியத்தில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 19 திகதி கைது செய்யப்பட்ட 12 மீனவர்களும் மன்னார் நீதவான் பெருமாள் சிவகுமார் முன்னிலையில் இன்று (03) ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது கடற்றொழில் திணைக்களத்தினால் குற்றப்பத்திரிகை மன்றில் தாக்கல் செய்யப்பட்டது.
தொற்று நிலைமை காரணமாக சந்தேகநபர்கள் மன்றில் இன்று (03) ஆஜர்படுத்தப்படவில்லை.
சந்தேகநபர்களை எதிர்வரும் 5 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அன்றைய தினம் மன்றில் ஆஜர்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்
இதனிடையே, இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த 68 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுடைய 10 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.