by Staff Writer 03-01-2022 | 4:23 PM
Colombo (News 1st) சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று (03) முதல் மீண்டும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக மசகு எண்ணெய் கொள்வனவு செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கலினால் சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தை இன்று (03) முதல் இரண்டாவது தடவையாக தற்காலிகமாக மூடுவதற்கு எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
எவ்வாறாயினும், சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்திற்காக 90,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய், சிங்கப்பூரில் உள்ள விநியோகத்தரிடமிருந்து கடன் வசதியின் அடிப்படையில் இறக்குமதி செய்ய இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எதிர்வரும் 23 அல்லது 24 ஆம் திகதிகளில் மசகு எண்ணெய் இலங்கைக்கு கிடைக்கும் என கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய. சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை எதிர்வரும் 26ஆம் திகதி மீண்டும் திறப்பதற்கு எதிர்பார்ப்பதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.