மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் தம்பதியினர் பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் தம்பதியினர் பலி

by Staff Writer 02-01-2022 | 4:54 PM
Colombo (News 1st) பண்டாரகம - கெஸ்பேவ பிரதான வீதியின் வெல்மில்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியிலிருந்து விலகி, அருகிலிருந்த பாறையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (02) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரகம - வல்கம பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளைஞர் மற்றும் கண்டியைச் சேர்ந்த 18 வயதான யுவதி ஆகியோரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.