by Staff Writer 02-01-2022 | 3:30 PM
Colombo (News 1st) தலவாக்கலை - வட்டக்கொடை மேல் பிரிவிலுள்ள நீர்த்தேக்கத்தில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று (02) காலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
57 வயதான மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம், பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.