உரத்தை மறுத்த விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படாது 

அரச உரத்தை பயன்படுத்தாத விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படாது - அமைச்சர் 

by Staff Writer 02-01-2022 | 6:16 PM
Colombo (News 1st) பெரும்போகத்திற்காக அரசாங்கம் வழங்கிய உரத்தை பயன்படுத்தாத விவசாயிகளுக்கு விவசாய நஷ்டஈடு வழங்கப்பட மாட்டாது என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். உரப் பற்றாக்குறையினால் விவசாயிகள் எதிர்நோக்கிய சேதங்களுக்கு நஷ்டஈடு வழங்குவது தொடர்பில் கண்டியில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.