அடுத்த வாரத்திற்குள் நாளாந்த Gas தேவைக்கு தீர்வு

அடுத்த வார இறுதிக்குள் நாளாந்த எரிவாயு தேவையை பூர்த்தி செய்ய முடியும் - லிட்ரோ

by Staff Writer 02-01-2022 | 3:06 PM
Colombo (News 1st) அடுத்த வார இறுதிக்குள் நாளாந்த எரிவாயு தேவையை பூர்த்தி செய்ய முடியும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயு உற்பத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு தேவையான இயந்திரங்களை நாட்டுக்கு கொண்டுவந்து நிறுவுவதற்கு நடவடிக்ககை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தேஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார். தற்போது வீடுகளில் முத்திரையுடன் உள்ள எரிவாயு சிலிண்டர்களை மாற்றுவதற்கான இயலுமை தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவரிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, இது தொடர்பிலான கலந்துரையாடல் நாளை (03) நடைபெறவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.