தடுப்பூசி அட்டைகளில் புதிய மென்பொருள்

தடுப்பூசி அட்டைகளில் புதிய மென்பொருள், குறியீட்டு எண்ணை அறிமுகப்படுத்த நடவடிக்கை

by Staff Writer 02-01-2022 | 3:20 PM
Colombo (News 1st) தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்குவதுடன் புதிய மென்பொருள் மற்றும் குறியீட்டு எண்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த பணி நிறைவடைந்ததும், முழுமையாக தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களுக்கு மாத்திரமே பொது இடங்களில் சஞ்சரிக்க அனுமதி வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இம் மாத இறுதிக்குள் இந்த நடவடிக்கை நிறைவு செய்யப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.