எரிவாயு  பிரச்சினையைத் தீர்க்க 3 வாரங்கள்  தேவை

எரிவாயு பிரச்சினையைத் தீர்க்க 3 வாரங்கள் தேவை: லிட்ரோ நிறுவனம் தெரிவிப்பு

by Staff Writer 01-01-2022 | 10:39 PM
Colombo (News 1st) சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று மக்கள் வரிசையில் காத்திருந்தனர். நாட்டில் தற்போது எரிவாயுவிற்கு நிலவும் தட்டுப்பாடு நீங்குவதற்கு மேலும் மூன்று வாரங்கள் செல்லும் என லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. சந்தையில் காணப்படும் சிலிண்டர்களை மீள பெற்றுக்கொள்ளல் மற்றும் புதிய தரப்படுத்தல் செயற்பாடுகளால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்தார்.