English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
01 Jan, 2022 | 10:29 pm
Colombo (News 1st) தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ள வல்வெட்டித்துறையை சேர்ந்த இரண்டு மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு இந்திய அரசு இன்று நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் இருந்து கடந்த ஆண்டு ஒக்டோபர் 22 ஆம் திகதி மீன்பிடிக்கச் சென்ற நிலையில், இயந்திரக் கோளாறு காரணமாக படகு எல்லை தாண்டி இந்திய கடற்பரப்பிற்குள் சென்றமையினால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் தொடர்பில் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்து சென்னையில் உள்ள எக்மோர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், எல்லைதாண்டிய குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட வல்வெட்டித்துறையை சேர்ந்த இரு மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு இந்திய அரசு இன்று நீதிமன்றுக்கு பரிந்துரை செய்துள்ளது.
அதன் பிரகாரம் அடுத்த வாரம் இவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
07 May, 2022 | 05:38 PM
03 Mar, 2022 | 07:08 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS