by Bella Dalima 31-12-2021 | 2:52 PM
Colombo (News 1st) ஹங்வெல்ல - துன்மோதர குமாரி எல்ல ஆற்றில் குளிக்கச்சென்று காணாமற்போன 16 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் அவிசாவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
16 வயது மற்றும் 14 வயதான 2 சிறுமிகளும் 29 வயதான யுவதி ஒருவரும் நேற்று மாலை நீரில் மூழ்கி காணாமற்போயிருந்தனர்.
மூவரில் ஒருவர் வத்தளை - ஹெந்தல பகுதியை சேர்ந்தவர் என்பதுடன், இருவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமற்போன ஏனைய இருவரையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.