பசுமை விவசாயக் கொள்கையில் மாற்றமில்லை

எத்தகைய சவால்கள் வந்தாலும்  பசுமை விவசாயக் கொள்கையில் மாற்றமில்லை: மஹிந்தானந்த அளுத்கமகே

by Staff Writer 31-12-2021 | 8:31 PM
Colombo (News 1st) எத்தகைய சவால்கள் வந்தாலும் பசுமை விவசாயக் கொள்கையை மாற்றமின்றி முன்னெடுக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். விவசாய அமைச்சிற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள செயலாளர் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். தனது அரசியல் பிம்பத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், நாட்டின் நலனையும் மக்களையும் கருத்திற்கொண்டு குறித்த கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் உறுதியாகவுள்ள ஜனாதிபதிக்கு தான் துணை நிற்பதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னர் பல அமைச்சுகளில் அமைச்சுப் பதவிகளை வகித்த போதிலும், அந்த அமைச்சுகளை விட விவசாய அமைச்சில் உரம், நெல் விடயத்தில் அதிக மாஃபியாக்கள் செயற்படுவதாக விவசாய அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளதாக விவசாய அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.