புத்தளத்தில் 15 வயது சிறுமி சடலமாக மீட்பு

by Staff Writer 30-12-2021 | 1:27 PM
Colombo (News 1st) புத்தளம் - கருவலகஸ்வெவ பகுதியிலிருந்து உயிரிழந்த நிலையில் சிறுமியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கருவலகஸ்வெவ பகுதியிலுள்ள கிணறொன்றிலிருந்து 15 வயதான சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பிரதேச மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமியின் வீட்டின் அண்மையிலுள்ள காணியொன்றிலுள்ள கிணற்றிலிருந்தே சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக தகவல்களை கருவலகஸ்வெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.