அத்தனகலயில் துப்பாக்கி முனையில் கொள்ளை

அத்தனகலயில் துப்பாக்கி முனையில் கெப் வாகனமும் 40 இலட்சம் ரூபா பணமும் கொள்ளை

by Staff Writer 30-12-2021 | 3:47 PM
Colombo (News 1st) அத்தனகல பகுதியிலுள்ள வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான கெப் ஒன்றையும் சுமார் 40 இலட்சம் ரூபா பணத்தையும் சிலர் இன்று (30) காலை கொள்ளையிட்டுள்ளனர். வாகனமொன்றில் சென்ற சிலர் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி, கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் கூறினர். சந்தேகநபர்கள் பயணித்ததாகக் கருதப்படும் வாகனம் சம்பவ இடத்திற்கு அருகில் கைவிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஏனைய செய்திகள்