15,000-ஐ அண்மிக்கும் கொரோனா மரணங்கள்

15,000-ஐ அண்மிக்கும் கொரோனா மரணங்கள்

by Staff Writer 29-12-2021 | 5:24 PM
Colombo (News 1st) நாட்டில் மேலும் 21 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த அனைத்து மரணங்களும் நேற்று (28) பதிவானவை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 14 ஆண்களும் 07 பெண்களும் அடங்குகின்றனர். நேற்று கொரோனா தொற்றினால் உயிரிழந்த 21 பேரில் 14 பேர் 60 வயதிற்கும் மேற்பட்டவர்களாவர். அதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,944 ஆக அதிகரித்துள்ளது.