ஆனந்த தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி

புத்தாங்கல ஆனந்த தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி

by Staff Writer 29-12-2021 | 7:52 PM
Colombo (News 1st) காலஞ்சென்ற புத்தாங்கல ஆனந்த தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று (29) இறுதி அஞ்சலி செலுத்தினார். புத்தாங்கல ஆனந்த தேரரின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் உள்ள அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தில் வைக்கப்பட்டிருந்தது. புத்தாங்கல ஆனந்த தேரர் நேற்று (28) காலமானார். அன்னார் தேரராவதற்கு முன்னர் இராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பணியாற்றியிருந்தார். இதனிடையே, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அன்னாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அன்னாரின் பூதவுடல் அம்பாறை - புத்தாங்கல பகுதிக்கு நாளை கொண்டு செல்லப்படவுள்ளது.