கைதிகள் தொடர்பில் கலந்துரையாடல்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் கலந்துரையாடல்

by Staff Writer 29-12-2021 | 8:42 PM
Colombo (News 1st) குற்றப்புலனாய்வு திணைக்களம்,பயங்கரவாத விசாரணைப் பிரிவு மற்றும் பொலிஸ் சட்ட பிரிவின் பணிப்பாளர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இன்று அழைக்கப்பட்டிருந்தனர். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நிஹால் சந்திரசிறி தெரிவித்தார் ஆணைக்குழுவின் புதிய தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க முன்னிலையில் பணிப்பாளர்கள் இன்று அழைக்கப்பட்டனர். கைதிகள் தொடர்பாக ஆராய்வதற்காக ஆணைக்குழுவிடம் உள்ள ஒழுங்குகளுக்கு அமைவாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக நிஹால் சந்திரசிறி தெரிவித்தார் இதன் மற்றுமொரு கட்டமாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நாளை (30) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய செய்திகள்