by Staff Writer 29-12-2021 | 8:31 PM
Colombo (News 1st) சந்தையில் அரிசிக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லையென வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இன்று (29) புறக்கோட்டையில் தெரிவித்தார்.
சந்தை நிலவரங்களை அறியும் நோக்குடன் அமைச்சர் இன்று புறக்கோட்டைக்கு சென்றிருந்தார். அங்கிருந்த போது அவருக்கு பிரதமரிடம் இருந்து தொலைபேசி அழைப்பொன்று கிடைத்தது.
அரிசி போதுமான அளவு உள்ளதாக பிரதமருக்கு தொலைபேசி மூலம் பந்துல குணவர்தன அறிவித்தார்.