அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை: பந்துல குணவர்தன

by Staff Writer 29-12-2021 | 8:31 PM
Colombo (News 1st) சந்தையில் அரிசிக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லையென வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இன்று (29) புறக்கோட்டையில் தெரிவித்தார். சந்தை நிலவரங்களை அறியும் ​நோக்குடன் அமைச்சர் இன்று புறக்கோட்டைக்கு சென்றிருந்தார். அங்கிருந்த போது அவருக்கு பிரதமரிடம் இருந்து தொலைபேசி அழைப்பொன்று கிடைத்தது. அரிசி போதுமான அளவு உள்ளதாக பிரதமருக்கு தொலைபேசி மூலம் பந்துல குணவர்தன அறிவித்தார்.