English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
29 Dec, 2021 | 8:20 am
Colombo (News 1st) இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துடன் இணைந்து Trinco Petroleum Terminal Ltd என்ற பெயரில் புதிய நிறுவனம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
IOC நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள எண்ணெய் குதங்களிலிருந்து அரசாங்கத்திற்கு கிடைக்கும் பங்கினை நிர்வகிப்பதற்காக குறித்த நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குறித்த எண்ணெய் குதங்களின் ஒரு பகுதியை மீண்டும் அரசாங்கத்திற்கு பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
IOC நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள திருகோணமலையின் 99 எண்ணெய் குதங்களின் பெரும் பகுதியை மீண்டும் பெற்றுக் கொள்வது குறித்த கலந்துரையாடல் இடம்பெறுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரச சொத்தான Trinco Petroleum Terminal Ltd நிறுவனத்தின் கீழ் செயற்படும் எண்ணெய் குதங்கள் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வலுச்சேர்ப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த நடவடிக்கைகள் அடுத்த மாதத்திற்குள் நிறைவடையும் என அமைச்சர் உதய கம்மன்பில நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.
17 May, 2022 | 06:03 AM
18 Apr, 2022 | 03:06 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS