English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
28 Dec, 2021 | 3:42 pm
Colombo (News 1st) கிளிநொச்சி – கெளதாரிமுனை பகுதியில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் படகு மூலம் யாழ்ப்பாணம் – குருநகர் பகுதிக்கு தப்பிச்சென்றிருந்த நிலையில், கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் பயணித்த படகையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
ஏற்கனவே கைது செய்யப்பட்டவருடன் மொத்தம் 4 சந்தேகநபர்கள் காணப்படுவதுடன், அவர்களில் 32 வயதான பெண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்று மோதல் இடம்பெற்றதுடன், இதன்போது ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். யாழ். ஆனைக்கோட்டையை சேர்ந்த 22 வயதான இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் நேற்று (27) மாலை இளைஞரின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
29 Apr, 2022 | 09:04 PM
16 Mar, 2022 | 08:47 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS