கொலையில் முடிந்த களியாட்ட நிகழ்வு

கொலையில் முடிந்த களியாட்ட நிகழ்வு

by Staff Writer 27-12-2021 | 2:24 PM
Colombo (News 1st) மட்டக்குளி - பொக்குனுவத்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 22 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் நேற்று முன்தினம் (25) இடம்பெற்ற களியாட்ட நிகழ்வில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்று கத்திக் குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளங்காணப்பட்டுள்ளார்.