Cumbre Vieja எரிமலை குமுறல் முடிவுக்கு வந்தது

Cumbre Vieja எரிமலை குமுறல் முடிவுக்கு வந்ததாக அறிவிப்பு

by Staff Writer 26-12-2021 | 5:29 PM
Colombo (News 1st) ஸ்பெயின் நாட்டின் La Palma தீவில் Cumbre Vieja எரிமலை குமுறல் முடிவுக்கு வந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் குமுறிவந்த Cumbre Vieja எரிமலை குமுறலினால் 3,000 இற்கும் அதிகமான சொத்துக்கள் அழிவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த எரிமலையை அண்மித்து வாழ்ந்து வந்த 7,000 இற்கும் அதிகமானோரை அங்கிருந்து வௌியேறுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.