English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
26 Dec, 2021 | 6:08 pm
Colombo (News 1st) தென்னாபிரிக்க பேராயர் டெஸ்மண்ட் டுட்டு (Desmond Tutu) தனது 90 ஆவது வயதில் இன்று (26) நித்திய இளைப்பாறினார்.
வெள்ளையர்களின் ஆட்சியை எதிர்த்து அமைதி வழியில் போராடியமையால், 1984 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு டெஸ்மண்ட் டுட்டுவுக்கு வழங்கப்பட்டது.
நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக பதவியேற்ற போது “வானவில் தேசம்” என்ற சொல்லாடலை உருவாக்கி பிரபல்யப்படுத்தியவராக பேராயர் டுட்டு காணப்படுகின்றார்.
பேராயரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பேராயர் டுட்டு, உலகம் முழுவதும் எண்ணற்ற மக்களுக்கு வழிகாட்டும் விளக்காகத் திகழ்ந்தவரென இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மனித கண்ணியம் மற்றும் சமத்துவத்துக்கான அவரது வலியுறுத்தல் என்றென்றும் நினைவில் கொள்ளத்தக்கது எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
14 Apr, 2022 | 03:31 PM
30 Nov, 2021 | 07:34 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS