English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
26 Dec, 2021 | 3:05 pm
Colombo (News 1st) அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 04 பேர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணை பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்த விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ குறிப்பிட்டார்.
இதனிடையே, அம்பாறை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரினூடாக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் பொலிஸ் நிலைய சிரேஷ்ட பொறுப்பதிகாரி ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் சடலங்கள் மீதான பிரேத பரிசோதனை அம்பாறை பொது வைத்தியசாலையில் இன்று (26) நடத்தப்படவுள்ளது.
நேற்று முன்தினம் (24) இரவு பொலிஸ் போக்குவரத்து பிரிவு சார்ஜன்ட் ஒருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 02 சார்ஜன்ட்கள் மற்றும் 02 கான்ஸ்டபிள்கள் ஆகியோர் உயிரிழந்தனர்.
இதன்போது காயமடைந்த திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் மேலும் இரண்டு பொலிஸ் உத்திகேத்தர்களும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியதன் பின்னர், T-56 ரக இரண்டு துப்பாக்கிகளும் 19 ரவைகளுடன் எத்திமலை பொலிஸ் நிலையத்தில் குறித்த சார்ஜன்ட் ஆஜராகியதன் பின்னர் அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
நேற்று (25) மாலை சந்தேகநபரை அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
11 May, 2022 | 07:36 PM
16 Mar, 2022 | 03:25 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS