நத்தார் பண்டிகை...

இயேசு பாலனின் பிறப்பை கொண்டாடும் நத்தார் பண்டிகை...

by Staff Writer 25-12-2021 | 2:49 PM
Colombo (News 1st) அன்பின், அமைதியின் தேவகுமாரன் - இயேசு பாலகன் பூமியில் அவதரித்துள்ளார். பாலகன் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை முழு உலகமும் வரவேற்று வருகின்றது. இயேசு பாலகன் பிறந்த தினத்தை கிழக்கு கரையின் பெத்தலகம் நகரில் கோலாகலமாக கொண்டாடுகின்றனர். வத்திக்கான் புனித பீட்டர் பெசிலிகா தேவாலயத்தில் பரிசுத்த பாப்பரசரினால் நத்தார் தின நள்ளிரவு ஆராதனை நடத்தப்பட்டது. நாட்டிலும் நேற்று (24) நள்ளிரவு விசேட ஆராதனைகளும் திருப்பலிகளும் ஒப்புகொடுக்கப்பட்டன. ராகம தேவத்த தேசிய பெசிலிகா தேவாலயத்தில் பிரதான திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. கொழும்பு பேராயர், வணக்கத்திற்குரிய மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் பிரதான திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இயேசு பாலகனின்பிறப்பை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களில் உள்ள தேவாலயங்களில் விசேட நத்தார் நள்ளிரவு திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன.