கிண்ணியா பிரதேச சபை வரவு செலவுத் திட்டம் தோல்வி

கிண்ணியா பிரதேச சபை வரவு செலவுத் திட்டம் தோல்வி

by Staff Writer 24-12-2021 | 7:21 PM
Colombo (News 1st) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வசமுள்ள திருகோணமலை - கிண்ணியா பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. கிண்ணியா பிரதேச சபையின் தவிசாளர் கே.எம்.நிஹார் தலைமையில் சபை அமர்வு நடைபெற்றது கிண்ணியா பிரதேச சபையில் 16 உறுப்பினர்களில் 15 பேர் மாத்திரமே இன்றைய அமர்வில் கலந்துகொண்டனர். 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கான வாக்கெடுப்பு இன்று முற்பகல் 9.30-க்கு ஆரம்பமானது. இதன்போது, வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 07 உறுப்பினர்கள் வாக்களித்ததுடன், எதிராக 8 பேர் வாக்களித்துள்ளனர். அதற்கமைய, மேலதிக வாக்குகளால் 2022 ஆம் ஆண்டிற்கான கிண்ணியா பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.