English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
24 Dec, 2021 | 3:05 pm
Colombo (News 1st) முல்லைத்தீவு – மூங்கிலாறு கிராமத்தில் 13 வயது சிறுமியின் கொலை தொடர்பில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமியின் தந்தை, தாய் மற்றும் சகோதரி ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
சிறுமியை இவர்கள் கொலை செய்து அதனை மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலை சம்பவத்தை வேறு வழியில் திசைதிருப்புவதற்காக சந்தேகநபர்கள் முயற்சித்துள்ள போதிலும், பல்வேறு கோணங்களில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளூடாக கொலை தொடர்பான முழுமையான விடயங்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, சிறுமியின் கொலை தொடர்பில் கடந்த 19 ஆம் திகதி, சிறுமியின் சகோதரியின் கணவர் கைது செய்யப்பட்டதுடன், எதிர்வரும் 4 ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 15 ஆம் திகதி காணாமற்போன சிறுமி, கொலை செய்யப்பட் நிலையில் 18 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
11 May, 2022 | 07:36 PM
22 Feb, 2022 | 06:08 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS