வீட்டின் சொத்துக்களை சேதப்படுத்திய குழுவினர்

யாழில் வீட்டின் சொத்துக்களை சேதப்படுத்திய குழுவினர்

by Staff Writer 23-12-2021 | 12:31 PM
Colombo (News 1st) கோண்டாவில் பகுதியில் இன்று (23) அதிகாலை வீடொன்றுக்குள் நுழைந்த அடையாளந்தெரியாத சிலரால் சொத்துக்களுக்கு சேதமேற்படுத்தப்பட்டுள்ளது. வீட்டின் ஜன்னலை உடைத்து சேதப்படுத்தி குறித்த குழுவினர் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் சேதப்படுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏனைய செய்திகள்