டிசம்பர் இறுதிக்குள் 3 Bn டொலர் கையிருப்பு

டிசம்பர் இறுதிக்குள் 3 பில்லியன் அமெரிக்க டொலர் கையிருப்பு - மத்திய வங்கி 

by Staff Writer 23-12-2021 | 2:23 PM
Colombo (News 1st) இம் மாத இறுதிக்குள் நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 03 பில்லியன் அமெரிக்க டொலர் வரை அதிகரிக்கும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கொவிட் 19 பெருந்தொற்று நிலைமை காரணமாக எழுந்த சவால்களுக்கு மத்தியிலும் இலங்கை கடனை மீளச் செலுத்தும் நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.