ஒரு மாத பிணையில் நளினி விடுவிப்பு 

ஒரு மாத பிணையில் நளினி விடுவிப்பு 

by Bella Dalima 23-12-2021 | 4:17 PM
Colombo (News 1st) இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை தொடர்பில் சிறையிலடைக்கப்பட்டுள்ள நளினிக்கு ஒரு மாதத்திற்கு பிணை வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நளினிக்கு ஒரு மாதம் பிணை வழங்குமாறு கோரி, அவரின் தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இரண்டு மாதங்களுக்கு பிணை வழங்குமாறு கோரி ஏற்கனவே மனு தாக்கல் செய்யப்பட்ட போதிலும், அது குறித்து நடவடிக்கை எடுக்காமையால், ஒரு மாத பிணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டதாக தி ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது. இதனிடையே தமிழக முதல்வருக்கும் நளினியின் தாயார் மனு ஒன்றை கையளித்துள்ளார். இந்நிலையில், நளினியின் தாயார் பத்மாவின் மனுவை பரிசீலித்தமைக்கு அமைய, நளினிக்கு ஒரு மாதம் பிணை வழங்க தீர்மானித்துள்ளதாக தமிழக அரசு சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். அரசு தரப்பு விடயங்களை கவனத்திற்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் , நளினிக்கு ஒரு மாதம் பிணை வழங்க உத்தரவிட்டுள்ளது.