English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
23 Dec, 2021 | 3:39 pm
Colombo (News 1st) மடகாஸ்கரில் ஹெலிகொப்டரில் பயணித்த போது ஏற்பட்ட திடீர் விபத்தால் கடலில் குதித்து 12 மணி நேரம் நீந்தி அமைச்சர் ஒருவர் உயிர் பிழைத்துள்ளார்.
ஆப்பிரிக்க கண்டத்தின் தென்கிழக்கே இந்திய பெருங்கடலிலுள்ள தீவு நாடான மடகாஸ்கரின் வடகிழக்கு கடற்கரை அருகே கடந்த 19 ஆம் திகதி 130 பயணிகளுடன் பயணித்த கப்பல் திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் 39 பேர் உயிரிழந்தனர். 68 பேரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கப்பல் விபத்து நிகழ்ந்ததும் மீட்புப் பணியில் ஈடுபட சென்ற மீட்புப்படையுடன் அந்நாட்டின் அமைச்சர் Serge Gelle-வும் ஹெலிகொப்டரில் சென்றார். அப்போது திடீரென ஹெலிகொப்டர் விபத்திற்குள்ளானதில், அமைச்சர் கடலில் குதித்து 12 மணி நேரம் நீந்தி மஹாம்போ என்னும் தீவை அடைந்து உயிர் பிழைத்திருக்கிறார்.
57 வயதான இவர் முன்னாள் பொலிஸ் அதிகாரி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதில் அமைச்சர், ‘திங்கள் கிழமை மாலை 7.30 மணிக்கு ஆரம்பித்த நீச்சல் மறுநாள் காலை 7.30 வரை நீடித்தது. பின் மஹாம்போ தீவை அடைந்தேன். நான் இறப்பதற்கான நேரம் இன்னும் வரவில்லை’ என தெரிவித்திருக்கிறார்.
♦️Le GDI Serge GELLE, un des passagers de l’hélicoptère accidenté hier a été retrouvé sain et sauf ce matin du côté de Mahambo.
☑️ Les sapeurs sauveteurs de la #4°UPC ont également retrouvé le carcasse de l’hélicoptère au fond de la mer. pic.twitter.com/sP2abwTMwB— Ministère de la Défense Nationale Madagascar (@MDN_Madagascar) December 21, 2021
03 May, 2022 | 06:59 PM
07 Apr, 2022 | 03:43 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS