English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
23 Dec, 2021 | 4:17 pm
Colombo (News 1st) இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை தொடர்பில் சிறையிலடைக்கப்பட்டுள்ள நளினிக்கு ஒரு மாதத்திற்கு பிணை வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நளினிக்கு ஒரு மாதம் பிணை வழங்குமாறு கோரி, அவரின் தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இரண்டு மாதங்களுக்கு பிணை வழங்குமாறு கோரி ஏற்கனவே மனு தாக்கல் செய்யப்பட்ட போதிலும், அது குறித்து நடவடிக்கை எடுக்காமையால், ஒரு மாத பிணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டதாக தி ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது.
இதனிடையே தமிழக முதல்வருக்கும் நளினியின் தாயார் மனு ஒன்றை கையளித்துள்ளார்.
இந்நிலையில், நளினியின் தாயார் பத்மாவின் மனுவை பரிசீலித்தமைக்கு அமைய, நளினிக்கு ஒரு மாதம் பிணை வழங்க தீர்மானித்துள்ளதாக தமிழக அரசு சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
அரசு தரப்பு விடயங்களை கவனத்திற்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் , நளினிக்கு ஒரு மாதம் பிணை வழங்க உத்தரவிட்டுள்ளது.
06 Apr, 2022 | 04:58 PM
09 Feb, 2022 | 04:08 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS