2000 காணிகள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன

2000 காணிகள் பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன

by Staff Writer 22-12-2021 | 3:02 PM
Colombo (News 1st) அடுத்த வருடம் மேலும் 2000 காணிகளை பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்க காணி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. காணி ஆணையாளர் நாயகம் மற்றும் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் பொறுப்பிலுள்ள காணிகளே இவ்வாறு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக காணி அமைச்சின் செயலாளர் R.D.ரணவக்க குறிப்பிட்டார். இதற்கான விண்ணப்பபடிவங்களை எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் அனைத்து பிரதேச செயலகங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.