வர்த்தகரின் மனைவி கொலை: இருவருக்கு விளக்கமறியல்

வர்த்தகரின் மனைவி வெட்டிக்கொலை: சந்தேகநபர்களுக்கு 4 ஆம் திகதி வரை விளக்கமறியல்

by Staff Writer 22-12-2021 | 3:25 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - அரசடி பகுதியில் வர்த்தகர் ஒருவரின் மனைவியை கொலை செய்து நகைகளை கொள்ளையிட்ட இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரையும் மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் நேற்று (21) ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர். அரசடியிலுள்ள வர்த்தகரின் வீட்டிற்கு வழமையாக வேலை செய்யும் தந்தையும் மகளுமே வர்த்தகரின் மனைவியை வெட்டி கொலை செய்துள்ளதாக பொலிஸார் கூறினர். வீட்டிலுள்ள நகைகளைக் கொள்ளையிடுவதற்காக சந்தேகநபர்கள் இந்த குற்றச்செயலை செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண்ணின் அவயங்களும் நகைகளை பெறுவதற்காக துண்டிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிலையில், இரத்தக்கறையுடன் இருவர் வீதியால் பயணிப்பதைக் கண்டு சந்தேகமடைந்த பொதுமக்கள் அவர்களைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய செய்திகள்