நற்சான்று பத்திரங்களை கையளித்த புதிய இராஜதந்திரிகள்

by Staff Writer 22-12-2021 | 1:06 PM
Colombo (News 1st) புதிய இராஜதந்திரிகள் 17 பேர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களை கையளித்துள்ளனர். 11 நாடுகளுக்கான தூதுவர்களும் 06 நாடுகளுக்கான உயர்ஸ்தானிகர்களும் தமது நற்சான்றுப் பத்திரங்களை கையளித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. ஜனாதிபதி மாளிகையில் இதற்கான நிகழ்வு நேற்று (21) மாலை நடைபெற்றது. எகிப்து, இந்தோனேசியா, ஜோர்தான், கொரிய ஜனநாயக குடியரசு, ஹங்கேரியா, மொரிடானியா, துனிசியா, ஆர்ஜன்டினா, டொமினிக் குடியரசு, ஸ்பெய்ன் மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளுக்கான தூதுவர்கள் தமது நற்சான்றுப் பத்திரங்களை கையளித்துள்ளனர். அதேபோன்று சியாரா லியோன், ருவண்டா, பொட்ஸ்வானா, மோல்டா, கயானா குடியரசு மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளுக்கான உயர்ஸ்தானிகர்களும் புதிய நியமனங்களை பெற்றுக் கொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.