அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகொப்டர்

அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகொப்டர்

by Staff Writer 22-12-2021 | 5:28 PM
Colombo (News 1st) தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான, விமானிகளுக்கு பயிற்சியளிக்கும் ஹெலிகொப்டர் ஒன்று பாணந்துறை - களுத்துறைக்கு இடையிலான பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகொப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக விமானப்படை ஊடகப்பேச்சாளர், க்ரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார். இதன்போது, பயிற்சி விமானிகளும் ஆலோசகரும் அதில் இருந்துள்ளனர். இவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென விமானப்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.  

ஏனைய செய்திகள்