வல்சபுகல விவசாயிகள் மீண்டும் உண்ணாவிரத போராட்டம்

வல்சபுகல விவசாயிகள் மீண்டும் உண்ணாவிரத போராட்டம்

by Staff Writer 21-12-2021 | 11:52 AM
Colombo (News 1st) வல்சபுகல விவசாயிகள் இன்று (21) முற்பகல் மீண்டும் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர். ஹம்பாந்தோட்டை காட்டு யானைகள் முகாமைத்துவ சரணாலயம் தொடர்பில் அரசாங்கம் வழங்கிய தீர்விற்கு திருப்தியடைய முடியாது என தெரிவித்தே மீண்டும் உண்ணாவிரதம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை - கட்டுவெவ முச்சந்தியில் இன்று (21) முற்பகல் எதிர்ப்பில் ஈடுபட்ட விவசாயிகள் பின்னர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். ஹம்பாந்தோட்டை காட்டு யானைகள் முகாமைத்துவ சரணாலயத்தை உடனடியாக வர்த்தமானியில் அறிவிக்குமாறு கோரி வல்சப்புகல பிரதேச விவசாயிகள் கடந்த ஜனவரி 18 ஆம் திகதி முதல் 105 நாட்களாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.