பேக்கரி உற்பத்திகளுக்கு கட்டுப்பாட்டு விலை இல்லை

பேக்கரி உற்பத்திகளை கட்டுப்பாட்டு விலையின்றி விற்க தீர்மானம்

by Staff Writer 21-12-2021 | 6:15 PM
Colombo (News 1st) இன்று (21) முதல் கட்டுப்பாட்டு விலையின்றி  பேக்கரி உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாளாந்தம் பொருட்களின் விலைகளை அதிகரிக்க முடியாது என்பதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஒவ்வொரு விலையில் பாண், பன்ஸ் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுவதாகவும் சங்கம் கூறியுள்ளது. இதனால் நுகர்வோர் பாதிக்கப்படாத வகையில், பொருட்களை விற்பனை செய்யுமாறு பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விற்பனையாளர்களிடம் கோரிக்கை விடுப்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.