பிலிப்பைன்ஸை தாக்கிய ராய் சூறாவளி; 375 பேர் பலி

பிலிப்பைன்ஸை தாக்கிய ராய் சூறாவளி; 375 பேர் உயிரிழப்பு

by Staff Writer 21-12-2021 | 12:26 PM
Colombo (News 1st) பிலிப்பைன்ஸை தாக்கிய 'ராய்' சூறாவளியினால் இதுவரை குறைந்தது 375 பேர் உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தீவுகளை Super Typhoon என வகைப்படுத்தப்பட்டுள்ள 'ராய்' சூறாவளி தாக்கியது. இதன்போது மணித்தியாலத்திற்கு சுமார் 195 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளது. சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி குறைந்தது 500 பேர் காயமடைந்துள்ளதுடன் 56 பேர் காணாமற்போயுள்ளதாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ராய் சூறாவளியின் காரணமாக அப்பகுதிகளில் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என அச்சம் வௌியிடப்பட்டுள்ளது.