சமூக வலைத்தளங்களூடாக மோசடியில் ஈடுபட்ட 7 பேர் கைது

சமூக வலைத்தளங்களூடாக மோசடியில் ஈடுபட்ட 7 பேர் கைது 

by Staff Writer 21-12-2021 | 2:25 PM
Colombo (News 1st) கொம்பனித்தெருவிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட 7 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (20) இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.