அத்துமீறி நுழைந்த 13 இந்திய மீனவர்கள் கைது 

கைதான 13 இந்திய மீனவர்களும் கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைப்பு 

by Staff Writer 21-12-2021 | 1:11 PM
Colombo (News 1st) இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் நயினாதீவில் கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்களும் யாழ். கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மீனவர்களை இன்று (21) பிற்பகல் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார். இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில், 13 இந்திய மீனவர்கள் 2 படகுகளுடன் நேற்றிரவு (20) கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் கடந்த 03 நாட்களில் 68 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.