English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
21 Dec, 2021 | 6:06 pm
Colombo (News 1st) மலையகத்தின் இருவேறு பகுதிகளில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி இன்று இருவர் உயிரிழந்துள்ளனர்.
நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெப்லோ பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி 67 வயதான வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டின் அருகிலிருந்த வர்த்தக நிலையமொன்றுக்கு சென்று திரும்புகையில், மரமொன்றிலிருந்த குளவிக்கூடு கலைந்து அவர் மீது தாக்கியுள்ளது.
பலத்த காயங்களுக்குள்ளான குறித்த நபர், வட்டவளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, கேகாலை – புசல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொக்சைல்ட் தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.
வேலை செய்துவிட்டு வீடு திரும்பும் வழியில் 54 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தை குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.
இந்த சம்பவம் இன்று நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சடலம் புசல்லாவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
20 May, 2021 | 04:16 PM
06 Jan, 2021 | 07:12 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS