English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
20 Dec, 2021 | 2:02 pm
Colombo (News 1st) புதிதாக பத்தாயிரம் (10,000) ரூபா நாணயத்தாளை அச்சிடும் திட்டம் எதுவும் இல்லை என நிதி அமைச்சு கூறியுள்ளது.
இது தொடர்பில் பரவும் வதந்திகளில் உண்மையில்லை என அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் இவ்வாறான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிலர் தவறான தகவல்களை உருவாக்குவதாக செயலாளர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, அந்நிய செலாவணி கையிருப்பின் அளவை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்குத் தேவையான திட்டங்களை மத்திய வங்கி ஆளுநர் மேற்கொண்டுள்ளதாக அதன் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
அந்நிய செலாவணி கையிருப்பை விரைவாக அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் கூறினார்.
இந்த விடயம் குறித்து மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை தொடர்புகொண்டு வினவியபோது, இம் மாத இறுதிக்குள் 3 பில்லியன் டொலருக்கும் அதிக அந்நிய செலாவணி கையிருப்பைத் திரட்ட முடியும் என அவர் நம்பிக்கை வௌியிட்டார்.
05 May, 2022 | 06:26 PM
27 Apr, 2022 | 08:19 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS