விமான எரிபொருளுக்காக டொலரை வழங்குமாறு கோரிக்கை

விமானங்களுக்கான எரிபொருளுக்காக டொலரை வழங்குமாறு பெட்ரோலிய கூட்டுத்தாபனம் கோரிக்கை

by Staff Writer 20-12-2021 | 1:52 PM
Colombo (News 1st) விமானங்களுக்கான எரிபொருளை விநியோகிப்பதற்கு தேவையான டொலரை வழங்குமாறு ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திடம் கோரப்பட்டுள்ளது. பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் மேலும் 330 மில்லியன் டொலரை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டியுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து உத்தியோகபூர்வமாக விமான சேவை நிறுவனத்திற்கு அறிவித்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும், எரிபொருளுக்கான டொலரை வழங்குவதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக நியூஸ்பெஸ்ட் வினவியபோது இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் கூறியது. இதேவேளை, மின்சார சபையின் எரிபொருள் தேவைக்கு டொலர் தேவைப்படுவதால் அதற்கு பொருத்தமான வழிமுறையை முன்னெடுக்குமாறு எரிசக்தி அமைச்சு, இலங்கை மின்சார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளது.