விது நம்பிக்கை நிதியத்தின் 17 ஆவது ஆண்டு நிறைவு

விது நம்பிக்கை நிதியத்தின் 17 ஆவது ஆண்டு நிறைவு

by Staff Writer 19-12-2021 | 4:44 PM
Colombo (News 1st) விது நம்பிக்கை நிதியத்தின் 17 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் சைகை மொழி காணொளி வெளியீட்டு நிகழ்வும் இன்று (19) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. விது நம்பிக்கை நிதியத்தின் பணிப்பாளர் விஜிதா நாகேந்திரம் தலைமையில், யாழ். தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. பாரம்பரியக் கலையான சிலம்படி நிகழ்வுடன் அதிதிகள் வரவேற்கப்பட்டனர். பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் சி. ஶ்ரீசற்குணராஜா, வட மாகாண விசேட கல்விக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் வி. விஷ்ணுகரன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது சைகை மொழி காணொளி வௌியிடப்பட்டது.