by Staff Writer 19-12-2021 | 4:06 PM
Colombo (News 1st) யாசகம் பெறுவோரின் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு போதைப்பொருளை வழங்கி அவர்களை யாசகத்தில் ஈடுபடுத்தும் பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதி விளக்குகள் அமைந்துள்ள பகுதிகளில் யாசகம் பெறுவோரின் குடும்பங்களிலுள்ள சிறுவர்களுக்கு போதைப்பொருள் வழங்கப்படுகின்றமை தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.
இதுதொடர்பில் பொலிஸாருடன் இணைந்து விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.