போதைப்பொருட்களுடன் சிவனொளிபாத மலை சென்றோர் கைது

போதைப்பொருட்களுடன் சிவனொளிபாத மலைக்கு சென்ற 12 பேர் கைது

by Staff Writer 19-12-2021 | 5:02 PM
Colombo (News 1st) போதைப்பொருட்களுடன் சிவனொளிபாத மலைக்கு யாத்திரை மேற்கொண்ட 12 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் பல பகுதிகளில் ஹட்டன் ஊழல் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் வசமிருந்த ஹெரோயின் மற்றும் கேரள கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 20 முதல் 30 வயதுக்குட்பட்ட சந்தேகநபர்கள் அனுராதபுரம், ராகம மற்றும் கொழும்பு பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்