மேலும் 14 கொரோனா மரணங்கள்

மேலும் 14 கொரோனா மரணங்கள்; இதுவரை 14,734 பேர் உயிரிழப்பு 

by Staff Writer 18-12-2021 | 8:56 PM
Colombo (News 1st) நாட்டில் மேலும் 14 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மரணங்கள் அனைத்தும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கிணங்க, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,734 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகிய 343 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,47,182 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரை 5,78 ,439 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இவர்களில் 16,537 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.