by Staff Writer 18-12-2021 | 5:57 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு - மூங்கிலாறு பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன 13 வயது சிறுமி இன்று (18) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கைவிடப்பட்ட வீடொன்றின் வளாகத்தில் இருந்து சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
சிறுமி கடந்த 15 ஆம் திகதி காணாமற்போனதாக பெற்றோரால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
தரம் 7 இல் கல்வி கற்ற மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பதில் நீதவான் எஸ்.பரஞ்சோதி, சட்ட வைத்திய அதிகாரி ஆகியோரின் விசாரணையின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.